எதிர்ப்பையும் மீறி புறப்பட்டது சீனக் கப்பல்!

297959776 6302833759744167 3658116457016247084 n

இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடப்பட்ட நிலையில், தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது சீன ராணுவத்தின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’.

இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு இம் மாதம் 11-ந்தேதி சீனக் கப்பல் வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த கப்பலின் வருகை பிராந்தியத்துக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது இலங்கை அரசு. இந்த நிலையில், தமக்கும் இலங்கைக்குமான விடயங்களில் தலையிடவேண்டாம் என சீனா இந்திய அரசிடம் கோரிக்கைவிடுத்திருந்தது..

தற்போது இந்தியாவின் எதிப்பையம் மீறி குறித்த ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்து புறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த கப்பல் இலங்கை நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

 

Exit mobile version