கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 20 அடி உயரமுள்ள மண்மேடு எதிர்பாராதவிதமாக வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஹேவாஹெட்ட, முல்ஓய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.
மேற்படி, விபத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகளும் சக ஊழியர்களும் மண்ணுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

