fish man
இலங்கைஅரசியல்செய்திகள்

ஆரம்பமானது மீனவர்களின் பாரிய கண்டன போராட்டம்

Share

இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மீனவர்களின் போராட்டமானது இன்று காலை 07.00 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் மூலம் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது.

இலங்கையில் இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரி கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் கடல் வளத்தினையும்,நீரியல் வளத்தினையும் அழிக்கும் இழுவை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனினும் இந்த சட்டத்தை இன்னமும் அமுல்படுத்தபடவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரையும் கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெற்றுவருகிறது.

இப் பேரணிக்கு பல்வேறு அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளது.

அத்தோடு பல அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...