278843087 4966471100132337 4668273744147016337 n
இலங்கைசெய்திகள்

போர்க்களமானது ரம்புக்கனை! – குவிகிறது கண்டனக் கணைகள்!!

Share

” கல்வீச்சுத் தாக்குதலுக்கு பதில் துப்பாக்கிச்சூடா பொலிஸ்மா அதிபரே? ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Mahinda Deshapriya

ரம்புக்கனையில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவத்தை அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

Julie Chung

” மக்கள் வன்முறையில் ஈடுபட்டால், சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அவர்களை கைது செய்யலாம், அவர்கள்மீது சூடு நடத்த வேண்டியதில்லை.

இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா? இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

pearl one news mahela 800x425 1 350x250 1

ஐ.நா., ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட மேலும் பல அமைப்புகள், அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...