20220319 114838
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்து

Share

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், அதனை இந்த அரசு மீள கையில் எடுத்துள்ளது. எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்.

யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் அழுத்தம் பிரயோகித்தார்.

” பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என அரசு உறுதியளித்துள்ள நிலையில், காலாவதியான அந்த சட்டம் மீள கையில் எடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகும். வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டங்களில் ஈடுபடும் உரிமை அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில் போராட்டக்காரர்கள்மீது எவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியும்? எனவே, கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும்.” – எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...