download 8 1 16
இலங்கைசெய்திகள்

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்!

Share

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் கற்கைநெறியை நிறைவு செய்த டிப்ளோமா தாரிகளுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற ஒன்றுகூடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அண்மையில் கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் குறித்த ஆசிரியர்கள் கடமையாற்றவுள்ளதாகவும் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...