இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்

24 66a9d091074c4 1
Share

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்

சிறிலங்கா அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த விடயத்தை தெற்கைப் போன்றே வடக்கிலும் சென்று கூறி வருகிறேன். சில தரப்பினரைப் போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை.

இதனால் வடக்கின் சில அரசியல் கட்சிகளினால் எம்முடன் இணைந்து செயற்பட முடியவில்லை. வடக்கின் ஒரு தொகுதி இளைஞர்கள் தற்பொழுது காணி, காவல்துறை அதிகாரம் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ள நிலையில், தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது எங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் தேர்தல்களில் வடக்கினை பிரதிநிதித்துவம் செய்து சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்குவது எமது இலக்கு.

அவ்வாறு தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கலாம், ஒரு காலத்தில் அவர் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ கூட பதவி வகிக்கலாம்.

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான எதிராளி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே (Sajith Premadasa) ஆவார்.

அத்துடன் எமது கட்சியிலிருந்து விலகி வெளியேறியவர்களை பிரதான சவாலாகவோ எதிராடிகளாகவோ கருதவில்லை“ என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...