24 66a9ce5798066
செய்திகள்

இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடிக்குமா..! வெளியான அறிவிப்பு

Share

இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடிக்குமா..! வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் புதிய போராட்டமொன்றிற்கு வழி வகுக்கும் என சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமால் குணரத்ன(Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர் ஒருவர், “விரும்பிய தேர்தல் முடிவுகள் கிடைக்காவிட்டால், இலங்கையில் இரண்டாவது போராட்டம் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள சிலர் கூறியுள்ளனர்.மறுபடியும் போராட்டம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு படையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்களா என கேட்டார்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், “அப்போது ஏற்பட்ட நிலைமை மிகவும் திடீர் நிலைமை.ஆனால் எல்லாவற்றையும் ஆய்வு செய்து ஏன் இப்படி நடந்தது இதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

எனவே அப்படியொரு நிலை மீண்டும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.அப்படியான சூழ்நிலையை தடுக்க காவல்துறையினர் தயாராக உள்ளனர். அவர்களால் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...