tamilni 134 scaled
இலங்கைசெய்திகள்

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்

Share

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முதல் பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றையதினம் (10.10.2023) முல்லைத்தீவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர்களுக்குரிய மதிப்பும், மரியாதையும் சரியாக கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இளைஞர்களின் போராட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்தமையாலே பேச்சுவார்த்தைக்கு பல நாடுகளுக்கு அழைத்தார்கள்.

ஆனால் அந்த இளைஞர்கள் ஒரே குறிக்கோளோடு எங்களுக்கு நியாயமான ஒரு தீர்வுக்காகத் தான் போராடினார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்காததனால் அந்த பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்பட்டன.

இலங்கை அரச படைகளால் விடுதலை புலிகளோடு போரிட முடியாது என்ற காரணத்தால் பல நாடுகள் சேர்ந்து இவர்களின் தியாகத்தை மௌனிக்கச் செய்து விட்டது. இருந்தாலும் இந்த உணர்வுகள் எம் மக்களிடத்தே அதிகமாக இருக்கி்றது.

இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனியாக இந்த நினைவுகூரலை செய்த நிலையும் இருக்கின்றது.

எல்லோருக்கும் நினைவுகூர விருப்பம் இருக்கின்றது. ஆனால் முன்பு இருந்த அடக்குமுறைகள் மக்கள் மீது இப்போது திணிக்கப்படுகின்றது.

நிச்சயமாக புலனாய்வாளர்கள் என்ற பெயரிலும், பொலிஸ், இராணுவம் என ஏதோ ஒரு வகையில் பலருக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதில்லையே தவிர இவர்களின் நினைவோடு தான் பயணிக்கிறார்கள். திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்திலே பல இடங்களில் நடந்தது. அவர்களை எண்ணிப்பார்த்தால் பெரிய கூட்டமாகத்தான் இருக்கும்.

மாலதி முதலாவது பெண் மாவீரர். இவர் மரணித்த நாளை நினைவு நாளாக நினைவு கூருகின்றோம்.

பெண்களில் தலைசிறந்த வீராங்கனையாக, அரசியல் துறையிலே தலை நிமிர்ந்து பயணிக்க கூடியவர்களாக, போராட்டக்களத்திலே துணிந்து பயணிக்க கூடியவர்களாக, பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முதல் பெண் மாவீரர் 36 ஆண்டுகளாக நினைவு கூரப்படுகின்றது.

விடுதலைபுலிகளின் தியாகத்தை நாம் மறக்கவில்லை. என்றோ ஒரு நாள் மாவீரர்களின் கனவுகள் நிறைவேறும். அந்நாளில் தனித் தமிழ் ஈழத்தில் நாங்கள் செயற்படும் நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...