இலங்கைசெய்திகள்

அநுர உரையாற்றவிருந்த மேடையை படம் பிடித்த தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

Share
15 2
Share

கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவிருந்த மே தினக் கூட்டத்திற்காக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.

சந்தேக நபரான இளைஞனின் நடத்தையை கண்காணித்த பின்னர் அவரைக் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர்.

அவர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் தற்போது வெள்ளவத்தை – கிருலப்பனையில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் பிலியந்தலை பகுதியில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கலந்து கொள்ளவிருந்த மே தினக் கூட்டத்தை மேடை மிகவும் ஆடம்பரமாக இருந்ததால் தான் படம் பிடித்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...