tamilni 316 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வெளிநாட்டு சேவை முடக்கம்

Share

இலங்கையின் வெளிநாட்டு சேவை முடக்கம்

அரசியல் நியமனங்களை நோக்காக கொண்டு, நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், போதிய எண்ணிக்கையிலான தொழில் இராஜதந்திரிகள் இல்லாமல் இலங்கையின் வெளிநாட்டு சேவை முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 268 பணியாளர்களுக்கு பதிலாக தற்போது 166 இராஜதந்திரிகள் மட்டுமே பணிகளில் உள்ளனர். அது போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில, தொழில் இராஜதந்திரிகளின் வெற்றிடங்கள் காரணமாக, இலங்கையில் உள்ள சுமார் 60 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் 22 பிரிவுகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தோனேசிய ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொழில் சேவையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் இல்லாமல் இயங்குவதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுச் சேவையும் பல தசாப்தங்களாக அரசியலாக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றன.

தற்போது, வோசிங்டன் மற்றும் மொஸ்கோ போன்ற முக்கிய தலைநகரங்களுக்கு தொழில் அல்லாத தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும், அரசியல்வாதிகளின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் சில பணிகளில் பணியாளர்கள் அதிகமாகவும், சில பணிகளில் ஆட்கள் குறைவாகவும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...