செய்திகள்இலங்கை

அதிகவிலைக்கு பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – அரசு எச்சரிக்கை

sugar 1
Share

நிர்ணய விலையை விட அதிகவிலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அரிசி மற்றும் சீனியின் விலை வெகுவாக அதிகரித்திருக்கின்ற நிலையில், இதற்கான தீர்வு குறித்து தெளிவுபடுத்துகின்ற வகையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீனியின் விலை ஏற்றத்துக்கு சீனி இறக்குமதியாளர்கள் பல காரணங்கள் கூறினாலும், அவை ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. ஒரு கிலோ கிராம் சீனியை 220 ரூபாவுக்கு விற்பனை செய்வதென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலே அவர்கள் சீனிக்கு அதிக விலையை நிர்ணயித்திருக்கின்றார்கள்.

எமது அமைச்சுடன் வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை இணைந்து நடைமுறை சட்டங்களுக்கு அமைவாக இவ்வாறான மிதமிஞ்சிய விலையுயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...