ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்!

Share

” ஒவ்வொரு மாதத்திலும் 9 ஆம் திகதி மட்டுமல்ல, ஒரு மாதமாவது, மக்கள் கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டுக்காக போராடிய இளைஞர்களை வேட்டையாடி, அவர்களை சிறையில் அடைப்பதற்கே தற்போது முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் மட்டுமே போராட்டக்காரர்கள் இருப்பதாக அரசு நம்புகின்றது. ஆனால் நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் உள்ளனர். மக்கள்தான் போராட்டத்தின் பங்குதாரர்கள். எனவே, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள் புரட்சியை ஒடுக்க முடியாது.

மக்கள் போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க நான் தயார். ஒரு நாளுக்கு மட்டுமல்ல, ஒரு மாதமாவது கொழும்பில் தங்கியிருந்து, நாட்டை மீட்க மக்கள் முன்வர வேண்டும்.” எனவும் பொன்சேகா அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...