25 68443941d7aeb
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்து அரசியல் செய்யும் இனவாதிகள்! சமூக ஆர்வலர் ஆதங்கம்

Share

இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மதவாதிகள் தங்கள் அதிகாரத்தை இழக்கும் ஒவ்வொரு முறையும், விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதாக பொய்களைப் பரப்பி வருகின்றனர் என சமூக ஆர்வலர் சிரிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை அழிக்க பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி இன்று பொலிஸ் முறையாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மத வெறியர்கள் வெள்ளவத்தை கடற்கரையில் உறவினர்களுக்காக நடத்திய நினைவு நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர்.

அங்கு சென்றவர்களின் குடும்பத்தின் ஒரு உறவினர் போரின் போது இறந்திருக்கலாம். அவர்களை நினைவு கூறுவது தவறல்ல, ஒரு உறவினரை இழந்ததன் வலி குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.

எனவே, சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையில் தமது உறவுகளை போரில் இழந்தவர்களால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இது விடுதலைப் புலிகளை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது.

இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிப்புறும் இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...