23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

Share

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகம், குருணாகலில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்தச் சேவையின் மூலம், வடமேல் மாகாண மக்கள் இனிமேல் தேசிய அடையாள அட்டைக்காக கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்குப் பயணிக்கத் தேவையில்லை. குருணாகல் மாகாண அலுவலகத்திலேயே சில மணி நேரங்களில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காலி மற்றும் நுவரெலியாவில் ஏற்கனவே இந்தச் சேவை வெற்றிகரமாகச் செயற்படும் நிலையில், இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைத் திட்டத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரச துறையில் விரைவான, நம்பகமான சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது மேலும் பலப்படுத்துகிறது எனவும், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் இதுபோன்ற அலுவலகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...