நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!
இலங்கைசெய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

Share

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள பெரும்போக பயிர்ச்செய்கை வறட்சியினால் பாதிக்கப்படும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் இலங்கை விவசாயிகள் கடினமான ஆண்டை எதிர்கொள்வார்கள் எனவும் ஆங்கில இதழில் தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக உலக விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், எல் நினோ விளைவு காரணமாக இலங்கையின் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவம் வரட்சியின் காரணமாக மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை பலவீனமடையும் நிலை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் வறட்சி நிலையை ஏற்படுத்தக்கூடிய மழைப்பொழிவு குறைவதை இது குறிக்கும், அத்துடன் இது முக்கிய பெரும்போக பருவத்தில் சாகுபடிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் எல் நினோ விளைவை 1998 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கை ஏற்கனவே அனுபவித்துள்ளது.

இந்த நிலையில் விவசாய திணைக்களமும் விவசாய அமைச்சும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை வகுத்து அடுத்த பெரும் பக்கத்தில் இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...