ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தொடர்ந்து பெய்துவரும், பலத்த மழை வீழ்ச்சியினால் குறித்த விபத்து சம்பவித்துள்ளதுடன், காணாமல்போன நபர்களைக் கண்டறிவதற்காக தற்போது பரந்த அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அனர்த்த நிலைமைகள் காரணமாக மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.