24 660e4f083acc3
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூரில் மோசடிகளில் சிக்கியுள்ள இலங்கை பெண்கள்

Share

சிங்கப்பூரில் மோசடிகளில் சிக்கியுள்ள இலங்கை பெண்கள்

சிங்கப்பூரில் (Singapore) பணிபுரியும் இலங்கை (Sri Lanka) பணிப்பெண்கள் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளதாக அந்தநாட்டின் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் (K. Shanmukham) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் 500 புலம்பெயர்ந்த பணிப்பெண்கள் கடந்த ஆண்டு மோசடிகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் பதிவான 423 மோசடிகளுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும்.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீட்டுப் பணியாளர்கள் இந்தியா (India), இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில், சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊழல் எதிர்ப்பு கல்வி தொடர்பான ஊட்டல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதவள அமைச்சகத்தின் கட்டாய தீர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்கள் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் கற்பிக்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த மோசடி புள்ளிவிபரங்களின் படி, அதிகபட்சமாக 46,563 மோசடிகள் பதிவாகியுள்ளன. ” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...