ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்

Share

ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்

வீழ்ந்திருந்த தேசத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க இருந்தமையிட்டு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தேசிய சொத்தாகவே ரணில் விக்ரமசிங்க எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாவுல பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை விழுந்த இடத்தல் இருந்து மீண்டும் தூக்கி வைப்பதாக இருந்தால், எனக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றவுடன் தெரிவித்தார்.

யாரையும் கைவிட்டு இந்த பயணத்தை செல்ல முடியாது. வைராக்கியம், குராேதம், பொறாமை பட்டுக்கொண்டு இந்த நாட்டை உலகுக்கு முன்னால் தூக்கி வைக்க முடியாது.

அத்துடன் நாங்கள் இன, மாத, குலம் என பிரிந்தோம். அதனால் நாடு என்றவகையில் நாங்கள் பின்னால் சென்றோம். தற்போது அந்த நிலைமையை மாற்ற வேண்டும். நாங்கள் மிகவும் கஷ்டமான காலத்தையே தாண்டினோம். அந்த கஷ்டமான காலத்தை தாண்டி தற்போது முன்னால் வந்திருக்கிறோம்.

எங்களுக்கு எதிர்காலம் தேவை என்றால், எங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலம் தேவை என்றால் நாங்கள் தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டி இருக்கிறது. எமக்கு தவறிய இடங்களை சரி செய்துகொள்ள வேண்டி இருக்கிறது.

அத்துடன் வீழ்ந்திருந்த தேசத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க இருந்தமையிட்டு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தேசிய சொத்தாகவே ரணில் விக்ரமசிங்க எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறார். அந்த தேசிய சொத்தை நாங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக் கொள்ள தவறினால் நாங்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்திடுவோம்.

அதனால் யாரையும் எந்த கட்சியையும் ஒதுக்கிவிட்டு இந்த பயணத்தை செல்ல முடியாது. அனைவரும் எமக்கு தேவை. மேலும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை தேசிய தலைவராக ஆட்சி செய்வதென்பது இந்த நாட்டை ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக மாற்றுவார்.

ரணில் விக்ரமசிங்கவிடம் தேசிய நிகழ்ச்சி நிரல் மாத்திரமே இருக்கிறது. அது இந்த நாட்டை 2048ஆகும் போது வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதாகும். அத்துடன் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையில் சிலர் அவசரப்பட்டு தேர்தலை கோரி வருகின்றனர்.

இந்த நாட்டை மீண்டும் குழப்புவதற்கு, இவ்வாறு தேர்தலை கோரும் பின்னணில் சர்வதேசத்தின் தேவைப்பாடும் இருக்கலாம்.

நாட்டு மக்கள் தேர்தலை கோருவதில்லை. விவசாயத்துக்கு தேவையான உரத்தை கேட்கின்றனர். வாழ்க்கைச்செலவை குறைக்குமாறு கோருகின்றனர். ரணில் விக்ரமசிங்க மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார்.

அதற்கு இடையூறு செய்ய வேண்டாம். அவரின் பயணத்துக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு தடைகளை ஏற்படுத்துபவர்களுக்கு மக்கள் இடமளிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Share

10 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
64 magnitude earthquake strikes baculin philippines no tsunami warning issued 1767762531718
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.7 மெக்னியூட் அளவில் அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

Seeman 3
செய்திகள்இந்தியா

ஜன நாயகன் படத்தைத் தடுக்கும் அளவிற்கு சர்ச்சைகள் இல்லை – சென்சார் தாமதம் குறித்து சீமான் ஆவேசம்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம்...

Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான...

9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர்...