இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்!
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்!

Share

இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்!

உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியானதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை விரைவாக களமிறக்குவோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புறக்கணித்து செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாத்து காட்டு சட்டத்தை இல்லாதொழித்தார். ஆகவே நன்றி மறக்கமாட்டோம்.

மக்கள் ராஜபக்சர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர்

ஏதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தீர்மானமிக்கதாக அமையும். எம்முடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டால் ஒன்றிணைந்து செயற்படலாம். அரசியல் ரீதியில் அவர் தனித்து செயற்பட்டால் அதற்கு நாங்கள் முழுமையாக இடமளிப்போம்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது. ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி என்ற ரீதியில் இதுவரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

கட்சியை பலப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் தொகுதி அமைப்பாளர் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வெளியானதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை விரைவாக களமிறக்குவோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாட்டு மக்கள் ராஜபக்சர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேற்றமடைவோம். இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...