rtjy 182 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல

Share

இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல

இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது ‘கடன் பொறி’ அல்ல மாறாக ‘அபிவிருத்தியற்ற பொறி’ என சீனத் தூதுவர் குய் தெரிவித்தார்.

மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் சீனா இன்னும் முழுமையாக ஈடுபாட்டை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையுடன் ‘கடன் இராஜதந்திரம்’ என்று அழைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக்கொள்கிறது.

கடந்த செவ்வாயன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் புவிசார் அரசியல் உயர்மட்ட குழு கலந்துரையாடல் ஒன்று, கொழும்பில் உள்ள சில உயர்மட்ட இராஜதந்திரிகள் மத்தியில் நடத்தப்பட்டது.

இதில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சீனத் தூதுவர் கி ஜென்ஹாங், பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பெக்டெட் மற்றும் ஜப்பானியத் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஸி ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது ‘கடன் பொறி’ அல்ல, மாறாக ‘அபிவிருத்தியற்ற பொறி’ என்பதை சீனத் தூதுவர் குய் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினார்.

சீனா எப்போதுமே இலங்கையின் மூலோபாய மற்றும் நம்பகமான பங்காளியாக இருந்து வருகிறது. மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது.

இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவத்தைப் பாதுகாப்பதில் சீனாவும் உறுதியாக ஆதரவளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சீனத் தூதருக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு ‘வல்லமையம்’ என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் இந்த விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றம் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியா மற்றும் அதன் தலைமையின் தற்போதைய முயற்சியை பொறுத்தவரை, பிராந்தியத்தின் பங்கை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் பிற ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவது என்பதாகும் என்று பாக்லே தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...