Navy
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

Share

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

கற்கள், போத்தல்களை வீசியெறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு படகிலும் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரகள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SrilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...