Untitled 1 35 scaled
இலங்கைசெய்திகள்

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க தயாராகும் இலங்கை

Share

சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை தயாராவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்து போராட, இலங்கை தனது வெளிநாட்டு கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்த ஒரு வருடத்தின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருதரப்பு கடனளிப்பவர்கள் சீனாவுக்காக காத்திருக்கும் நிலையிலும், பலதரப்பு கடன் வழங்குபவர்கள் அதே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சீனாவின் வலியுறுத்தல்களாலும், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தற்போது முட்டுக்கட்டைக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தற்போது ஒரு வார காலப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார்.

எனினும் இதுவரையில், இலங்கையின் கடன் நிவாரணக் கோரிக்கை குறித்த சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்று த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை பலரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...