Gottabhaya
இலங்கைஅரசியல்செய்திகள்

சர்வதேச நாணயநிதியத்தினை நாடுமா இலங்கை: முடிவு நாளை!

Share

புதிதாகப் பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து இக்கூட்டத்தின் போது ஆராயப்படுமென தெரியவந்துள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா? இல்லையா? என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படவுள்ளது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

மேலும் நாளைய அமைச்சரவைக் கூட்டம் தீர்க்கமானதாக இருக்கும் என்றும், இக்கூட்டத்தில் நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதித்து தீா்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு அமைச்சரவை கூட்டங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்காரவும் பந்துல குணவர்த்தனவும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடினால் அரசிலிருந்து வெளியேறுவேன் என அமைச்சர் வாசுதேவநாணயக்கார எச்சரித்துள்ளார்.

எனினும் மாற்று வழிமுறைகள் உள்ளனவா என பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியவேளை அவர் யோசனைகள் எவற்றiயும் முன்வைக்கதவறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...