8 1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன

Share

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன

2024ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கையின் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வருடத்தின் மத்திய நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையிலான மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அசலை திருப்பிச் செலுத்துவதாகவும், மீதி 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள், வட்டிச் செலுத்தலாகவும் இருந்தது.

முன்னதாக, வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவது 2022 ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இடைக்காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, 5,670 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,527 மில்லியன் டொலர்கள் வட்டி என்பன 2021 ஜூன் இறுதிவரையில் செலுத்தப்படாத கடன் சேவையாக குவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கை கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...