5 7
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின்கீழ், திறைசேரி பற்றுச்சீட்டுகள் மற்றும் பத்திரங்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு செலுத்தப்படும் வட்டியை 9வீதமாக குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த செயற்பாட்டின் மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களையே உயர்நீதிமன்றம் நேற்று(30.10.2024)தள்ளுபடி செய்துள்ளது.

சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்கம் உட்பட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....