3 8
இலங்கைசெய்திகள்

யார் வென்றாலும் 3 மாதங்களில் தகுதி நீக்கம்! புதிய ஜனாதிபதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

யார் வென்றாலும் 3 மாதங்களில் தகுதி நீக்கம்! புதிய ஜனாதிபதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் எவர் வென்றாலும் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களிற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சம்பள உயர்வு குறித்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இது இலஞ்சம் போன்றது. இதன் காரணமாக அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு குறித்து வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

உணவு வழங்குவது தகுதிநீக்கம் செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவிப்பது இலஞ்சம் வழங்குவதை போன்றது.

இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என முறைப்பாடு அளிக்கப்பட்டால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதிநீக்கப்படலாம்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் செலவுகள் குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றோம், தேர்தல் ஆணைக்குழுவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

வேட்பாளர்களின் சொத்துக்கள் குறித்த பிரகடனம் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும், இதன் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...