24 66926b4f52367
இலங்கைசெய்திகள்

நீதித்துறையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் : விஜயதாச ராஜபக்ச வேண்டுகோள்

Share

நீதித்துறையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் : விஜயதாச ராஜபக்ச வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலைத் தடுப்பதற்காக சிலர் தொடர்ந்தும் நீதிமன்றத்தை நாடுவதாக கூறியுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe), நீதித்துறையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடமும், சட்டத்தரணிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பிரகடனப்படுத்துவதை தடுக்குமாறு, ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இறுதி பதினோராவது மணித்தியாலத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்காளர்கள், மக்கள் மற்றும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும குற்றம் சுமத்தினார் .
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நான்கு நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளாக மட்டுப்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு ஆணைக்கு அமைவாக 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் அவதானத்துடன் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

இதன்படி, 19இன் படி எந்த ஒரு ஜனாதிபதியும் ஐந்தாண்டுகளுக்கு மேல் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.

எனினும் சிலர் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீதித்துறையை கேலி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அத்துடன் சட்டத்தை அறிந்த மக்களும் சட்டத்தரணிகளும் கூட வெட்கமின்றி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர்.

எனவே நீதித்துறையை மக்களும் சட்டத்தரணிகளும் கேலி செய்யக்கூடாது.

அரசியல்வாதிகளும் ஒரு நாளாவது அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது. ‘நாய் குறி’ என்று குறியிடப்படுவதற்கு முன்பு நாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது பழமொழி என்றும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...