24 660799b4c9dbe
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

Share

ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)(Vinayagamoorthi Muralidaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்(Batticaloa) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்மான் படையணி என்ற புதிய படையணி ஒன்றை தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரசியலில் தீவிரமாக இயங்கிய கருணா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததுடன் செயற்பாட்டு ரீதியாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

மேலும், ராஜபக்சர்களின்(Rajapaksa Family) தீவிர ஆதரவாளனாகவும் கருணா செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களால் கைவிடப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இந்தநிலையிலேயே தற்போது இலங்கையில் இரண்டு பிரதான தேர்தல்கள் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப்போவதாக கருணா அறிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...