tamilni 80 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்

Share

இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்

இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளை ஆய்வு செய்த போது அதில் 1406 கிராம் கஞ்சா மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் கொழும்பு தபாலகததில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 14,085,000 ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ளவர்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீண்ட நாட்களாக பொதிகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் அவற்றினை ஆய்வு செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 86 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை தபால் மதிப்பீட்டு அலுவலகத்தின் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...