இலங்கை
அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
![அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது 1 கேரள கஞ்சாவுடன் இருவர் கைது](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2023/07/tamilni-8-scaled.jpg?lossy=2&strip=1&webp=1)
கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போது வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய மன்னார் பேசாலை, மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகியவை மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள் - tamilnaadi.com