இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம்
இலங்கைசெய்திகள்

இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம்

Share

இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம்

இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது ஏதேனுமொரு விடயத்தை மையமாக வைத்து, அதனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய அபாயம் ஏற்படப் போவதாக மக்களை பீதியடைய செய்யும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அவ்வாறு எந்த அபாயமும் தற்போது ஏற்படவில்லை. கடந்த காலங்களில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக மக்களை பயமுறுத்தினர்.

ஆனால் இன்று அவ்வாறு ஏதுவுமே இடம் பெறவில்லை.

எனவே சமூகத்தில் அரசாங்கத்துக்கு எதிராக இவ்வாறு திட்டமிட்ட போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

அதற்கமையவே மருந்துகள் குறித்தும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியா, இலங்கைக்கு மாத்திரமின்றி பலநாடுகளுக்கும் மருந்துகளை விநியோகித்து வருகிறது. எனவே ஒரு சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காக இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான கருத்துக்கள் இராஜதந்திர ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...