இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம்
இலங்கைசெய்திகள்

இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம்

Share

இந்திய மருந்துகள் தரக் குறைவென முத்திரை குத்த வேண்டாம்

இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது ஏதேனுமொரு விடயத்தை மையமாக வைத்து, அதனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய அபாயம் ஏற்படப் போவதாக மக்களை பீதியடைய செய்யும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அவ்வாறு எந்த அபாயமும் தற்போது ஏற்படவில்லை. கடந்த காலங்களில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக மக்களை பயமுறுத்தினர்.

ஆனால் இன்று அவ்வாறு ஏதுவுமே இடம் பெறவில்லை.

எனவே சமூகத்தில் அரசாங்கத்துக்கு எதிராக இவ்வாறு திட்டமிட்ட போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

அதற்கமையவே மருந்துகள் குறித்தும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியா, இலங்கைக்கு மாத்திரமின்றி பலநாடுகளுக்கும் மருந்துகளை விநியோகித்து வருகிறது. எனவே ஒரு சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காக இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான கருத்துக்கள் இராஜதந்திர ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...