3 18
இலங்கைசெய்திகள்

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும் மற்றும் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற டிப்ளோமா வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” இலங்கையின் கல்விப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவு தொடர்பான விடயதானங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்முனைவு பற்றிய கல்வியை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனாலேயே இந்த சமூகம் முன்னேறவில்லை. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும், வேலைகளை உருவாக்க வேண்டும்.

இதுதான் நாட்டுக்கு தேவை, இதை பற்றி பேச வேண்டும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து தொழில்முனைவோராகுங்கள்.

இந்த தொழில்முனைவோர் கருத்தை சமூகமயமாக்க நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன்.

பாரம்பரியத்திற்கு புறம்பாக எப்படி சிந்திப்பது? ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவா? வித்தியாசமாக சிந்திக்கவா? அப்படி நினைப்பதனூடாக இலக்குகளை அடைய முடியுமென நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...