300593818 5367868793261952 5469180823014857854 n
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டில் பிளவு! – பீரிஸ், டலஸ் உட்பட 13 எம்.பிக்கள் வெளியேற்றம்!!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின் முக்கியமான 13 எம்.பிக்களே இவ்வாறு, ஆளுந்தரப்பில் இருந்து வெளியேறி, எதிரணி பக்கம வந்து, சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தமது அணி ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தது, அதற்கான காரணங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்களை விபரித்தார். விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினார். அத்துடன், சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ள மொட்டு கட்சி எம்பிக்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். இதனால் மொட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டது.

சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டு கட்சி எம்பிக்கள் விபரம்

1. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
2. டலஸ் அழகப்பெரும
3. பேராசிரியர் சன்ன ஜயசுமன
4. பேராசிரியர் சரித ஹேரத்
5. கலாநிதி நாலககொடஹேவா
6. கலாநிதி குணபால ரத்னசேகர
7. வைத்தியர் உபுல் கலப்பதி
8. வைத்தியர் திலக் ராஜபக்ச
9. சட்டத்தரணி டிலான் பெரேரா
10.சட்டத்தரணி உதயன கிரிந்திகொட
11.சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார
12.கே.பி.எஸ். குமாரசிறி
13. லலித் எல்லாவல

ஆர்.சனத்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...