அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!
இலங்கைசெய்திகள்

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!

Share

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!

விவசாய பயிர்களுக்கு நீர் வழங்குமாறு கோரி விவசாயிகள் குழுவொன்று மாத்தறைக்கு படையெடுக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சரின் வீட்டிற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் குழுக்கள் நுழைவதை தீவிரமாக சோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறைக்கு பிரவேசிக்கும் பகுதியிலும், கொழும்பில் இருந்து மாத்தறைக்குள் நுழையும் பகுதியிலும் இரண்டு விசேட பொலிஸ் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இரவு பகலாக தொடர்ச்சியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 இற்கும் மேற்பட்ட இரும்பு சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேவையெனில் இராணுவத்தை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, கடும் வறட்சி நிலவும் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தண்ணீர் கோரி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...