20220804 100723 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வடக்கில் விசேட பொதுமக்கள் நடமாடும் சேவை!

Share

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நகர விருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் நடமாடும் சேவை ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பிரதி பணிப்பாளர்திருமதி கவிதா ஜூவகன் தெரிவித்துள்ளார்,

வடபகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை பெற்று கொடுப்பதற்காக பொதுமக்கள் நடமாடும் சேவையானது இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது

முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடத்த எதிர்வரும் 9 ம் திகதி செவ்வாய்க்ககிழமை நகர விருத்தி அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தில் முதலாம் மாடியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்டமாக வவுனியா மாவட்டம் மற்றும் முல்லைத் தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வவுனியா கலாச்சாரம் மண்டபத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இரண்டு பொதுமக்கள் நடமாடும் சேவையும் காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 மணி வரை நடைபெறவுள்ளது

குறித்த நடமாடும் சேவையில் நகர விருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்த அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகரஅபிவிருத்தி பிரதேசமாக பிரகடணப் படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்களது திட்டமிடல் அனுமதிகள் தொடர்பான பிரச்சனைகள் அதாவது கட்டிட கட்டுமானம், காணி தொடர்பான பிரச்சனைகள் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் மேலும் வேறு கட்டிட அனுமதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் நடமாடும் சேவையில்பெற்று கொடுக்கப்படும்

இதில் அபிவிருத்தி திட்டமிடல் அனுமதி தொடர்பாக துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்களின் பங்கு பற்றுதலோடு இந்த பொதுமக்கள் நடமாடும் சேவையானது

நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவே குறித்த நடமாடும் சேவையில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் குறித்த நடமாடும் சேவையில் பங்கு பற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...