AIR 2 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவருக்கு விசேட நடைமுறை!

Share

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நாட்டுக்குள் நுழைய முன்னர் புறப்படும் இடத்தில் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனில் விமான நிலையத்தில் மற்றொரு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை எனவும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறையாகும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் இலங்கையை வந்தடைந்த பின் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புறப்படும் நாட்டில் 72 மணிநேரத்துக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தொற்றில்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...