rtjy 105 scaled
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Share

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது நேற்று(10.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையிலான குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 4000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த இரண்டு மாகாணங்களிலும் முக்கியமான பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படை, குற்றப் புலனாய்வுத் துறை, அரச புலனாய்வு சேவை , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பிற பொலிஸ் பிரிவுகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....