Tamil News large 2084034
இந்தியாஇலங்கைசெய்திகள்

நிவாரணம் வழங்குவதற்கு விசேட குழு

Share

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கு ஒரு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷவின் வழிகாட்டுதலின் கீழ் இழப்பீட்டு அலுவலகத்துடன் இணைந்ததாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசர வேலைத்திட்டமாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவின் தலைமையிலேயே விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் நபர்களின் தேவையான ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...