30 2
இலங்கைசெய்திகள்

மூன்று கோடி வட் வரி ஏய்ப்புச் செய்த நிறுவனப் பணிப்பாளர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை

Share

மூன்று கோடி வட் வரி ஏய்ப்புச் செய்த நிறுவனப் பணிப்பாளர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான வட் வரியை ஏய்ப்புச் செய்த நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள் இருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பணிப்பாளர்களான கணவன் – மனைவி ஆகியோருக்கே கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த தம்பதி தமக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மூலமாக செலுத்தப்பட வேண்டிய வட் வரி சுமார் மூன்று கோடி ரூபாவைச் செலுத்தாமல் வரி ஏய்ப்புச் செய்துள்ளனர்.

அதற்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த தம்பதியினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் மூன்று கோடி ரூபா வரியை செலுத்த மேலும் ஐந்து வருட கால அவகாசம் கோரப்பட்ட போதும் அதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் மேற்குறித்த தம்பதிக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...