20 2
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெற்றிடம்: ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Share

ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெற்றிடம்: ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாட்டில் தற்போது ஆடைத்தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய்க்கு பின்னர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அதிகளவிலான தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றுள்ளமை மற்றும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை இதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த ஆய்வின் படி ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது சுமார் நாற்பதாயிரம் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

ஏற்றுமதிக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை செய்து முடிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ள இலங்கை ஏற்றுமதி கைத்தொழில் சபையின் மேலதிக செயலாளர் ருமேஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், ஆடைத் தொழிலுக்கான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை கண்டுபிடிப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்றுமதி வருமானம் கடந்த மாதம் 1165. 4 மில்லியன் அமெரிக்கன் டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பானது 4.18 வீத வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதி, தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏற்றுமதி நடவடிக்கைகளின் முன்னேற்றமே, இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...