19 3
இலங்கைசெய்திகள்

தண்ணீர் போத்தல் விலை தொடர்பில் வெளியான தகவல்

Share

தண்ணீர் போத்தல் விலை தொடர்பில் வெளியான தகவல்

சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தலின் விலையை குறைக்க முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் அழைப்பாளர் சப்புமல் குமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது சந்தையில் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலை 70 ரூபாவுக்கு வழங்க முடியும் என கூறியுள்ளது.

இதேவேளை நாடு முழுவதிலும் உள்ள மோசடிகாரர்களினால் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலையை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொருட்களின் விலைகள் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...