train tours 10 sri lanka
இலங்கைசெய்திகள்

ஓட்டுனர்கள் பற்றாக்குறை – ரயில்கள் ரத்து

Share
ஓட்டுனர்கள் பற்றாக்குறையினால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால் இதுவரையில் திருப்திகரமான மறுமொழிகள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட 20 ற்கும் அதிகமான ஓட்டுனர்கள் ஓய்வு பெற்றமையே இந்த நிலைக்குப் பிரதான காரணம் எனவும் இது தொடர்பாக அரச அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அநுராதபுரம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பதுளைக்கு செல்லும் நீண்ட தூர ரயில் சேவைகள், சரக்கு மற்றும் எரிபொருள் போக்குவரத்து ரயில்கள் மற்றும் திருகோணமலைக்கு கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் எதிர்காலத்தில் பல ரயில்களை ரத்து செய்ய நேரிடும் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...