rtjy 114 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Share

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொலிஸ்துறையின், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களினபடி, கடந்த அக்டோபர் மாதத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பை கொண்டுள்ளன.

அறிக்கையின்படி, இந்த காலகட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட மொத்தம் 131 சிறுமிகள் உடல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த செப்டம்பரில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வெளியிட்ட தகவலில், அந்த மாதத்திற்குள் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் தகாத முறையில் வழிநடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இவற்றில் 22 குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் .

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...