rtjy 115 scaled
இலங்கைசெய்திகள்

வியாஸ்காந்தை தேசிய அணியில் இணைக்காதது ஏன்…!

Share

வியாஸ்காந்தை தேசிய அணியில் இணைக்காதது ஏன்…!

இலங்கை கிரிக்கெட் அணியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.அண்மையில் LPL போட்டிகளில் பிரகாசித்த வியாஸ்காந்திற்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்படுமானால் அவரால் தேசிய அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியும்.சிறுபான்மை இனம் என்பதால் அவரை உள்வாங்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று(10.11.2023) கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய அணியை பார்த்தால் அங்கு திறமையானவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள்.

இன,மத, மாநில வேறுபாடினன்றி தகுதியானவர்கள் அங்கு இணைக்கப்படுகிறார்கள். உதாரணமாக இந்திய அணியில் உலகக்கிண்ண போட்டியில் பிரகாசித்த கொண்டிருக்கும் அங்கே சிறுபான்மையினமாக இருக்க கூடிய மொகமட் சிராஜ், மொகமட் சமி நாட்டின் வெற்றியில் பங்கெடுத்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியில் சிறுபான்மை இனம் ஓரங்கட்டப்படுகிறார்கள் ,ஒதுக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் நிர்வாகத்தினால் சிறுாபன்மையின வீரர்கள் திட்டமிட்டு புறந்தள்ளப்படுகிறார்கள். முக்கியமாக வடக்கு,கிழக்கு வீரர்கள் இணைக்கப்படுவதில்லை.

இலங்கை கிரிக்கெட் அணியை சிங்கள அணியென அழைப்பதே உத்தமம்”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...