சீனத் தூதரகம் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை நாடியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செயற்கைக்கோள் சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கோரிய நிலையில், குறித்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ எதிர்வரும் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டது.
இருப்பினும் குறித்த கப்ப லின் வருகைக்கு எதிராக இந்திய அரசால் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.
இந்தநிலையில் தற்போதைய அரசால் தற்போது கப்பலின் வருகையை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews

