kaje
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை! – சபையில் கஜேந்திரன்

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்..

2009 ஆம் ஆண்டளவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மிகக் கேவலமான முறையில் சோதனை செய்யப்படுகின்றன எனவும் இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலை சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை லொஹான் ரத்வத்த புரிந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் மற்றைய அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படவில்லை.அவரிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு நாடாளுமன்றிலிருந்து அவரை வெளியேற்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை பல்வேறுவிதமான கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...