2 1 18
இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர் சமுதிதவின் பாதுகாப்பை அதிரடியாக நீக்கிய அநுர அரசு

Share

ஊடகவியலாளர் சமுதிதவின் பாதுகாப்பை அதிரடியாக நீக்கிய அநுர அரசு

சிங்கள ஊடகவியலாளரான சமுதித சமரவிக்கிரமவுக்கு (Chamuditha Samarawickrema) வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவுக்கு (Gotabaya Rajapaksa) எதிரான மக்கள் கிளர்ச்சியின் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் சமுதித சமரவிக்கிரவை அச்சுறுத்தும் வகையில் சமுதித்தவின் வீட்டுக்கு மனிதக் கழிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ரணிலின் ஆட்சிக்காலத்தில் சமுதித்தவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அக்காலத்தில் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்றும், அவரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார, இன்றைய அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் குரல் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நேற்றையதினம் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இது ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலின் ஆரம்பம் என்று சமுதித சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...