1 1 35
இலங்கைசெய்திகள்

மலிவு விலையில் பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள்: வெளியான நற்செய்தி

Share

மலிவு விலையில் பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள்: வெளியான நற்செய்தி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை நேற்று (25) பார்வையிடும் போது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு காகிதங்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கடதாசி கூட்டத்தபானமும் பல வருடங்களாக நலிவடைந்து வரும் விதம் தனது கண்காணிப்பு பயணத்தின் போது காணப்பட்டதாகவும், இதுவரையில் இருந்த குறைபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பணியாளர்கள் ஆற்றலுடன் பணியாற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...

veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...