rtjy 70 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி! எந்நேரமும் தாக்குதல் நடத்தும் வளம்

Share

விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி! எந்நேரமும் தாக்குதல் நடத்தும் வளம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், ஜே.வி.பி. கலவரத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி, நிலம், நிர்வாக கட்டமைப்பு காணப்பட்டது. இலங்கை இராணுவத்தை எந்நேரமும் தாக்கும் கடல் மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தும் வளம் காணப்பட்டது.

ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு என்ற நிலையில் வைத்துக் கொண்டே அரசாங்கம் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர தலைமை தாங்கிய அரசியல்வாதிகள், இராணுவத்தளபதிகள் உட்பட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒரு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இது முற்றிலும் அநீதியானது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காக ஒரு சில நாடுகள் ஐ.நா சபையின் சாசனத்தையும் அடிப்படை கொள்கைகளையும் மீறியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...